Tuesday 7 February 2012

தோழர்களுக்குக் கடிதம்

தோழர்களுக்குக் கடிதம்

-    வி.இ.லெனின்

மார்க்சியம் ஓர் ஆழ்ந்த, அறிவார்ந்த பன்முகப் பார்வையுடைய தத்துவமாகும். இதன் காரணமாக, ஆச்சரியமின்றித் துண்டுதுண்டான மேற்கோள்கள் – குறிப்பாக மேற்கோள்களைச் சரியான விதத்தில் எழுப்பாதபோது – மார்க்சியத்திடமிருந்து முறித்துக் கொள்பவர்களின் விவாதங்களிலும், மார்க்சியத்திடமிருந்து பெறப்பட்டுக் காணப்படும். இராணுவ சதியாலோசனை, ஒரு கறாரான வர்த்தக ஸ்தாபனத்தால் அமைக்கப்படவில்லையென்றால், அதன் அமைப்பாளர்கள் அரசியல் இயக்கத்தைப் பொதுவாகவும், சர்வதேசச் சூழலைக் குறிப்பாகவும் பகுத்தாராய்ந்திருக்கவில்லை யென்றால், ஸ்தாபனமானது பெருவாரியான மக்களின் அனுதாபத்தைப் பெற்றிருக்கவில்லையென்றால், புறவய உண்மைகள் நிரூபிப்பது போன்று புரட்சிகர நிகழ்ச்சிகளின் வளர்ச்சி, குட்டிமுதலாளிய சமாதானக் கற்பனைகளுடன் ஒரு நடைமுறை மறுப்பைக் கொண்டு வந்திருக்கவில்லையென்றால். பெருவாரியான  சோவியத் வடிவ அமைப்புக்களின் புரட்சிகரப் போராட்டமானது அதிகாரமுடையதாக அங்கிகரிக்கப்படவில்லையென்றால், அல்லது அவை நடைமுறையில் வென்றிருக்கப்பட வில்லை என்பதைத்  தாங்களாகவே வெளிப்படுத்தியிருக்கிறதெனில், அனைத்து மக்களின் எண்ணத்திற்கு மாறாக அரசாங்கமானது ஓர் அநீதியான போரைத் தொடர்கிறது என்ற மனோபாவமானது இராணுவத்தில் முதிர்ந்திருக்கவில்லை என்றால் (போர்க்காலமானால்) எழுப்பப்படும் கோஷ்ங்கள் (அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே, உழுபவனுக்கே நிலம், அனைத்து ரகசிய உடன்படிக்கைகளையும் ,ரகசிய அதிகாரத்தையும்  உடனே ரத்துச் செய், போரில் பங்கேற்றுள்ள நாடுகள் அனைத்திலும் சனநாயக அமைதிக்கான உடனடிக் கோரிக்கை என்பன போன்றவை) பரந்துபட்டுள்ள அளவில் அறிந்துள்ளதாகவும் பிரபல்யமானதாவும், மாறியிருக்கவில்லையென்றால் முன்னேறிய தொழிலாளர்கள், மக்களின் பயமில்லாத  சூழலையும் கிராமப்புறங்களின் ஆதரவினையும் – தீவிரமான விவசாய இயக்கங்களின் மூலமோ  அல்லது நில உடைமையாளர்களுக்கு எதிராகவும், அவர்களைப் பாதுகாக்கிற அரசுக்கு எதிராகவும், எழுச்சிகளின் மூலமோ ஆதரவு நிரூபிக்கப்பட வேண்டும் – நிச்சயித்துக் கொள்ளவில்லையென்றால் நாட்டின் பொருளாதார நிலைமை, அமைதியான மற்றும் பாராளுமன்ற வழிகளின் மூலம்   பிரச்சனைகளுக்குச் சாதகமான தீர்வுக்கான ஊக்கமான நம்பிக்கைகளை உட்கொண்டிருந்தால் – அது இராணுவ சதி ஆலோசனை – ஒரு பிளாங்கிய வாதமாகும்.

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும் பற்றி-
ஒரு தொகுப்பு – பக்கங்கள் 138-139

No comments:

Post a Comment